குறள் சொல்லும் நெறி
முயற்சிச் சிறப்புடையோரை விட மேம்பட்டவர் | அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர் |
வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுபவர் | உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர். |
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்வது | சினம் |
உலகத்தின் இயல்பு இரண்டு வகைப்படும் | செல்வம் உடையவர் அறிவுரையவராக இருப்பதில்லை தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை. |
மக்களுக்கு இயற்கை அறிவு எதனால் ஏற்படும் | மனத்தால் |
நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் | கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது |
மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது | நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவனின் உயர்வு |
யாரிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளையும் மருந்தாகத் தரும் மரத்தைப் போன்றது | பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் |
யாரை துன்பம் வருத்த வருத்த ஞானம் வளரும் | தவமிருப்பவரை |
படைக்குப் பாதுகாப்பு | வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கு |
மருத்துவம் எத்தனை வகையில் அடங்கும் | நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் ஆகிய நான்கு வகையில் அடங்கும். |
கொடாமை என்னும் பாறை மோதினால் உடைவது | பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு. |
உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டியது | ஒழுக்கம் |
எப்போது பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவராக கருதப்படுவார் ? | உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார். |
எப்போது ஒரு மன்னன் பகைவர் இன்றியும் தானே கெடுவான் | குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன் |
வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது எது? | அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது |
பாடலோடு பொருந்தா இசையும், இரக்கம் இல்லாத கண்களும் | பயனில்லை |
இவ்வுலகமே உரிமை உடையதாகும், யாருக்கு? | நடுநிலையாக கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு |
இழிவானது எது? | அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாதது |
ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும் | பிறருக்கு உதவி செய்யாதவர் பெற்ற செல்வம். |
யார் அமைச்சர்? | தொழில் செய்யத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல் செய்பவர் |
எது ஒருவர்க்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும் | நல்வழியில் சேர்த்த பொருள் |
பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் | ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும். அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும். |
யாருடைய குடி உயர்ந்து விளங்கும் | விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவர் |
யார் தேவர்களைப் போல, தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்? | கயவர் |
கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர் | கயவர் |
எது தலைசிறந்தது? | தன்னை இகழ்பவரைப் பொறுப்பது |
யாரை பொறுமையால் வெல்ல வேண்டும்? | செருக்கினால் துன்பம் தந்தவரை |
எது ஆராய்ந்து அறியும் உரைக்கல்? | ஒருவரின் செயல்பாடுகளே |
தீராத துன்பம் தருவது | ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வதும், அவரைப் பற்றி ஐயப்படுதலும் |
யாருடைய நட்பு கனவிலும் இனிமை தராது? | செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு |
பேதையின் செயல்கள் | தகாத செயலுக்கு வெட்கப்படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லாமை, ஏதொன்றையும் பாதுகாக்காமை ஆகியவை |
யாருடைய உயிர், சாகும்வரை உள்ள நோய் ! | சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர் |
இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம் எப்போது? | துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால், |
யார் கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், தவறு செய்வதில்லை? | ஒழுக்கமான குடியில் பிறந்தவர் |
சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் | பிறரிடம் அன்பும், பழிக்கு நாணுதல், சமத்துவ எண்ணம், இரக்கம், உண்மை ஆகியவை |
சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி எது? | செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல் ஆகியவை |
யார் உலகத்துக்கு அச்சாணி போன்றவர் | உழுபவர் |
புலித்தோலை போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது | மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவரின் வலிய தவக்கோலம் |
எது அரசரை காப்பாற்றும்? | அரசரின் குற்றமற்ற ஆட்சி |
அரசனின் கடமை | ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது. |
சிறந்த சொல்லாற்றலின் இயல்பு | கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் |
ஆண்மை | பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்பர் |
ஆண்மையின் கூர்மை | பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்பர். |
யாருடைய நட்பு பழகப் பழக இன்பம் தரும் | பண்புடையவர் நட்பு |
வறுமை வந்த காலத்தில் எப்படி வாழவேண்டும்? | ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும் |
சான்றோரால் ஆராயப்படுவது | பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் |
வாய்மை எனப்படுவது | மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் |
யார் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பார்? | உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர் |
சிறந்த அரசின் செயல் | பொருள் வரும் வழிகளை அறிதல், அவ்வழியில் பொருளை சேர்த்தல், சேர்த்த பொருளை பாதுகாத்தல், காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும் |
வாழும் மக்களுக்கு கண்கள் போன்றது | எண்ணும் எழுத்தும் |
பெய்யாது கெடுப்பதும், பெய்து காப்பதும் | மழை |
யார் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்? | அன்புடையவர் |
ஒருவர்க்கு மிகச் சிறந்த அணி | பணிவும் இன்சொல்லும் |
எந்த செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும் | களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் |
நிலையான செல்வம் | ஊக்கம் |
ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும் | தளராத ஊக்கம் உடையவனிடம் |
எந்த அளவிற்கு மனிதர்கள் உயர்வார்கள் | தாம் கொண்ட ஊக்கத்தின் அளவிற்கு |
சிறந்த அறம் | உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பது |
ஈகை | இல்லாதவர்க்கு தருவதே |
அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது | தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்றுதல் |