திருக்குறள் - சிறப்புகள் - Thirukkural Sirappugal-School Book- Notes -


 
இப்பதிவில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள திருக்குறள் பகுதியிலிருந்து கேட்கப்படும்  வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

திருக்குறள் = திரு+ குறள்

  • 133 அதிகாரம் - 1330 குறட்பாக்கள் கொண்டது
  • (திரு-சிறப்புப் அடைமொழி, குறள் –இரண்டடி வெண்பா)
  • இலக்கணக்குறிப்பு  - அடையடுத்த கருவியாகுபெயர்
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
  • குறள் வெண்பாவால் ஆனது
  • முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1812
  • முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்.
  • திருக்குறளின் சிறப்பினை விளக்கப் பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுக்கப்பட்ட நூலே திருவள்ளுவமாலை.
  •  தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல்
  • தமிழ்நூல்களில் “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள்
  • திருக்குறள் கரத்தில் தொடங்கி கர ஒற்றில் முடிகிறது.
  • குறிப்பறிதல் - திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சி பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
  • திருக்குறளில் இடம்பெறும் இரு மரங்கள் - பனை, மூங்கில்
  • ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு. போய்.
  • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது’- என்றவர் - ஆல்பர்ட் சுவைட்சர்.
  • மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் - திருக்குறள்
  • திருக்குறளில் பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் பல கூறப்பட்டுள்ளன.
  • ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு ’மடியின்மை’ என்னும் அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் அட்டவணையே தருகிறார் - என்றவர் முனைவர். வெ.இறையன்பு.


சிறப்புப் பெயர் – 

  • குறள், உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், பொதுமறை, தமிழ் மறை, முதுமொழி, பொருளுறை, உத்தரவேதம், தெய்வநூல், அறவிலக்கியம், தமிழர் திருமறை, மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல்.
  • உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்
  • இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத நூல்
  • மொழிபெயர்ப்பு- ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகளுள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

             “பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்

            “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

                – இதில் இரண்டு என்பது திருக்குறளை குறிக்கிறது.

 

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் (பதின்மர்)

            தருமர், தாமத்தர், திருமலையார்,

            பரிதி, பரிபெருமாள், பரிமேலழகர்,

            மல்லர், மணக்குடவர், நச்சர், காளிங்கர் 

                    (சிறந்த உரை- பரிமேலழகர் உரை)

                    (முதல் உரை - மணக்குடவர்)

பரிபெருமாள் தனது உரையில், பண்புடைமை என்பது,

    • ’பண்புடைமையாவது யாவர்மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை’ என்று கூறுகிறார். 


திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்

  • முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், நாயனார், மாதானுபங்கி, 
  • ஜி.யு. போப் திருவள்ளுவரை ’உலகப் புலவர்’ என்று போற்றுகிறார்
  • சிலை- கன்னியாகுமரி (133 அடி)
  • திருவள்ளுவர் பல்கலைக்கழகம் -  வேலூர்  

பால்

அதிகாரம் (எண்ணிக்கை)

இயல் (எண்ணிக்கை)

இயல்களின் பெயர்கள்

அறம்

38

4

பாயிரவியல் (04)

இல்லறவியல் (20)

துறவறவியல் (13)

ஊழியல் (01)

பொருள்

70

3

அரசு இயல் (25)

அமைச்சு இயல் (32)

ஒழிபியல் (13)

இன்பம்

25

2

களவியல் (07)

கற்பியல் (18)

 

133

09

 

குறளும் கவிஞர்களின் புகழுரையும்

·         வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்.

·         வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”- பாரதிதாசன்