திருக்குறள் = திரு+ குறள்
- 133 அதிகாரம் - 1330 குறட்பாக்கள் கொண்டது
- (திரு-சிறப்புப் அடைமொழி, குறள் –இரண்டடி வெண்பா)
- இலக்கணக்குறிப்பு - அடையடுத்த கருவியாகுபெயர்
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
- குறள் வெண்பாவால் ஆனது
- முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1812
- முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்.
- திருக்குறளின் சிறப்பினை விளக்கப் பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுக்கப்பட்ட நூலே திருவள்ளுவமாலை.
- தமிழில் எழுதப்பட்ட உலகப்
பனுவல்
- தமிழ்நூல்களில் “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள்
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது.
- குறிப்பறிதல் - திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சி பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
- திருக்குறளில் இடம்பெறும் இரு மரங்கள் - பனை, மூங்கில்
- ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு. போய்.
- நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- ’இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது’- என்றவர் - ஆல்பர்ட் சுவைட்சர்.
- மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் - திருக்குறள்
- திருக்குறளில் பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் பல கூறப்பட்டுள்ளன.
- ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு ’மடியின்மை’ என்னும் அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் அட்டவணையே தருகிறார் - என்றவர் முனைவர். வெ.இறையன்பு.
சிறப்புப் பெயர் –
- குறள், உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், பொதுமறை, தமிழ் மறை, முதுமொழி, பொருளுறை, உத்தரவேதம், தெய்வநூல், அறவிலக்கியம், தமிழர் திருமறை, மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல்.
- உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்
- இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத நூல்
- மொழிபெயர்ப்பு- ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகளுள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
“ஆலும் வேலும்
பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
–
இதில் இரண்டு என்பது திருக்குறளை குறிக்கிறது.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் (பதின்மர்)
தருமர், தாமத்தர்,
திருமலையார்,
பரிதி, பரிபெருமாள், பரிமேலழகர்,
மல்லர், மணக்குடவர், நச்சர், காளிங்கர்
(சிறந்த உரை- பரிமேலழகர் உரை)
(முதல் உரை - மணக்குடவர்)
பரிபெருமாள் தனது உரையில், பண்புடைமை என்பது,
- ’பண்புடைமையாவது யாவர்மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை’ என்று கூறுகிறார்.
திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்
- முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், நாயனார், மாதானுபங்கி,
- ஜி.யு. போப் திருவள்ளுவரை ’உலகப் புலவர்’ என்று போற்றுகிறார்
- சிலை- கன்னியாகுமரி (133 அடி)
- திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - வேலூர்
பால் |
அதிகாரம்
(எண்ணிக்கை) |
இயல்
(எண்ணிக்கை) |
இயல்களின்
பெயர்கள் |
அறம் |
38 |
4 |
பாயிரவியல்
(04) |
இல்லறவியல்
(20) |
|||
துறவறவியல்
(13) |
|||
ஊழியல்
(01) |
|||
பொருள் |
70 |
3 |
அரசு
இயல் (25) |
அமைச்சு
இயல் (32) |
|||
ஒழிபியல்
(13) |
|||
இன்பம் |
25 |
2 |
களவியல்
(07) |
கற்பியல்
(18) |
|||
|
133 |
09 |
|
குறளும் கவிஞர்களின் புகழுரையும்
·
“வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்.
· “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”- பாரதிதாசன்